7th Tamil Term – 1 Oneliner (New and old book)

7ஆம் வகுப்பு பருவம் – 01 ஒருவரி பாடம் (புதிய மற்றும் பழைய புத்தகம்)

இயல் – 1

எங்கள் தமிழ்

1. “அன்பும் அறமும் ஊக்கிவிடும் அச்சம் என்பதைப் போக்கிவிடும்” என்றப் பாடலடிகளை இயற்றியவர் – நாமக்கல் கவிஞர்

2. தமிழ்மொழி எம்மாதிரியான அறிவை நமக்கு தருவதாக வெ. இராமலிங்கனார் கூறுகிறார்? அருள்நெறி நிரம்பிய அறிவு

3. ‘எங்கள் தமிழ்என்னும் கவிதையை இயற்றியவர் – வெ. இராமலிங்கனார்

4. வெ. இராமலிங்கனார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? நாமக்கல் கவிஞர்

5. காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் – நாமக்கல் கவிஞர்

6. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்

7. ‘எங்கள் தமிழ்என்னும் கவிதை இடம்பெற்றுள்ள நூல் – நாமக்கல் கவிஞர் பாடல்கள்

8.’கத்தி யின்றி ரத்த மின்றி”
யுத்த மொன்று வருகுதுஎன்றப் பாடலை இயற்றியவர் – நாமக்கல் கவிஞர்

9. “இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்”, என்ற பாடலைப் பாடியவர் – நாமக்கல் கவிஞர்

பொருள் தருக:

10. ஊக்கிவிடும்- ஊக்கப்படுத்தும்

11. விரதம்  – நோன்பு

12. குறி – குறிக்கோள்

13. பொழிகிற – தருகின்ற

14. நெறி – வழி

 

பிரித்து எழுதுக:

15.குரலாகும் – குரல்+ஆகும்

16. சேர்த்து எழுதுக: வான்+ஒலி – வானொலி

17. ஒரு பாடலின் சொற்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது  – மோனை

18. ஒரு பாடலின் சொற்களில்இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது  –  எதுகை

19. ஒரு பாடலின் சொற்களில் கடைசி எழுத்து ஒன்றுபோல் வருவது – இயைபு

 

ஒன்றல்ல இரண்டல்ல

20. “ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்”
எனத் துவங்கும் கவிதையை இயற்றியவர் – உடுமலை நாராயணகவி

21. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் – பரணி

22. ‘இசைப்பாடல்என்று அழைக்கப்படும் நூல் – பரிபாடல்

23. ‘வான்புகழ் கொண்டஎன்று அழைக்கப்படும் நூல் – திருக்குறள்

24. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றவன் – வள்ளல் வேள்பாரி

25.புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் – வள்ளல் குமணன்

 

பொருள் தருக:
26.
ஒப்புமை – இணை

27. அற்புதம் – வியப்பு

28. முகில் – மேகம்

29. உபகாரி – வள்ளல்

30. உடுமலை நாராயணகவி எவ்வாறு போற்றப்படுகிறார்? பகுத்தறிவுக் கவிராயர்

31. நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதை எழுதியவர் – உடுமலை நாராயணகவி

32. அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்டது சங்க இலக்கியம்

33. வானில் முகில் கூட்டம் திரண்டால் – மழைபொழியும்

பிரித்து எழுதுக:

34. இரண்டல்ல –  இரண்டு + அல்ல

35. தந்துதவும்  – தந்து+உதவும்

சேர்த்து எழுதுக:

36. ஒப்புமை+இல்லாத –  ஒப்புமையில்லாத

37. “முல்வைக்குந் தேர்க் கொடுத்தான் வேள் பாரி வான்
முகிலினும் புகழ்படைத்த உபகாரி”, என்ற பாடல் வரிகளைப் பாடியவர் – உடுமலை நாராயணகவி

38. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர் – பருந்தறிவுக் கவிராயர்

39. தமது பாடல்கள் மூலம் பகுந்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் — உடுமலை நாராயணகவி

40. பிரித்து எழுதுக:                                                                                                                                                                             எட்டுத்தொகை எட்டு+நொகை
பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

41. தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது மொழி

42. மனிதனின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எதன் மூலம் கொண்டு செல்வப்படுகிறது? மொழி

43. வாயினால் பேசுப்பட்டு கேட்டு பிறரால் கேட்டு உணரப்படுவது – பேச்சுமொழி

44. மொழியின் முதல் நிலை – பேசுவதும், கேட்பதும்

45. கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழி

46. மொழியின் இரண்டாம் நிலை எழுதப்படுவதும், படிக்கப்படுவதும்

47. நேரில் காண இயலாத நிலையில் செய்நியைந் தெரிவிக்க உதவுவது – எழுந்து மொழி

48. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது – பேச்சு மொழி

49. கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது – பேச்சுமொழி

50. பேச்சுமொழியின் சிறப்புக்கூறுகள் – உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்றம், இறக்கம்

51. பேசப்படும் சூழலைப் பொருந்து பேச்சுமொழியின் பொருள் வேறுபடும்.

52. “சூழந்தையை நல்லா கவனிங்க” என்று கூறும்போது கவனிஎன்னும் சொல்லின் பொருள் – பேணுதல்

53. “நில், கவனி, செவ்” என்று சொல்லும்போது கவனிஎன்ற சொல்லின் பொருள் – பாதுகாப்பு

54. பேச்சுமொழியின் ஒரு தொடரில் எந்த சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்ப பொருள் வேறுபடும்.

55. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபும் தத்தயில் சிறிது உள வாரும்” என்னும் இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் – நன்னூல்.

56. “பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த  நிலையில் வைத்துக் கருதப்படும்  மொழியாகும்” என்றவர் – மு. வரதராசனார்

57. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என்றவர் – மு. வரதராசனார்

58. பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும், மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

59. ஒரே மொழியைப் பேசும் மக்கள் பல்வேறு இடங்களில் வாழும்போது சூழலுக்கேற்ப மாற்றமடைந்து, தொடர்பின்மை காரணமாக இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அவ்வாறு உருவாகும் புதிய மொழியைக் கிளைமொழி என்பர்.

60. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் கன்டைம், தெலுங்கு, மலையாளம்

61. ஒரு மொழியானநு நீண்ட காலம் நிலைபெறுவதற்கு இன்றியமையாதது – எழுத்து வடிவம்

62. எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப சொற்கள் சிதைவடைவதில்லை.

63. பேச்சுமொழியை உலக வழக்கு என்பர்.

64. எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்பர்.

65. பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அம்மொழி இரட்டை வழக்கு மொழி எனப்படும்.

66. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையேயான வேறுபாட்டை முறையே உலகவழக்கு, செய்யுள்வழக்கு என்றவர் – தொல்காப்பியர்.

67. கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.

68. குழந்தைகளுக்கு பிறமொழிகள் எப்போது அறிமுகமாகின்றன? படித்தல், எழுதுதலின் போது

69. பேச்சுமொழியில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

70. எழுத்துமொழியில் பெரும்பாலும் மொழித்தூய்மை பேசப்படுகிறது.

71. பேச்சுமொழியில் என்பதை என்றும் என்றும் என்றும் மாற்றி ஒலிப்பர். எடுத்துக்காட்டாக இலைஎன்பது எலஎன்றும் உலகம்என்றும் ஒலகம்என்றும் ஒலிப்பர்.

72. ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு பேச்சுமொழி உதவுகிறது

73. ஒரு மொழி காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழி தேவைப்படுகிறது.

74. நாளேடுகள் மற்றும் பருவ இதழ்களில் இன்றும் எழுத்துத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

75. “எளியநடையில் தமிழ்நூல் எழுத வேண்டும்                                                                                                                                    இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன்

76. “தெளிவுறுத்தும் படங்களோடு சுவடிஎல்லாம் செய்து

 செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்” என்னும் பாடல் வரிகள்        யாருடையது?     பாவேந்தர் சொலவடைகள்

77. பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருப்பவை சொலவடைகள்.

78. சொலவடைகள் தற்போது எவ்வாறு வழங்கப்படுகின்றன? பழமொழிகள்

 

பழமொழியின் பொருள்:

79. எறும்பு ஊரக் கல்லும் தேயும் – மாற்றம்

80. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் – மதிப்பு

81. அதிரஅடிச்சா உதிர விளையும் – முயற்சி

 

குற்றியலுகரம், குற்றியலிகரம்

82. குறில் எழுத்துக்களைக் குறிக்கப் பயன்படுத்தும் சாரியை – கரம்.

எ.கா.-அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்

83. நெடில் எழுத்துக்களைக் குறிக்கப் பயன்படுத்தும் சாரியை – கான்.

எ.கா. – ஐகான், ஔகான்

84. குறில், நெடில் எழுத்துக்களைக் குறிக்கப் பயன்படும் சாரியை – காரம். எ.கா. – . மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்

85. ஆய்த எழுத்தைக் குறிக்கப் பயன்படும் சாரியை – கேனம்

எ.கா.-அஃகேனம்

86. தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர்.

87. முதலெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? முப்பது (30)

88. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? பத்து (10)

89. உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துக்களும் – முதலெழுத்துக்கள் எனப்படும்

90. கு, சு, டு, து, பு, று ஆகிய வல்லின உகரங்களும் சொல்லின் முதலிலும் இடையிலும் வரும் போது – முழுமையாக ஒலிக்கிறது.

91. கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின்

இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.

92. தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.

எ. கா. – காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு.

93. தனிக்குறியில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.

94. ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர். எ.கா. – புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

95. குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது? ஆறு

96. தனிநெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

97. நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும். எ.கா. – பாகு, மாசு, பாடு, காது, ஆறு.

98. ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்ததொடர்க் குற்றியலுகரம். எ.கா. – எஃகு, அஃது

99. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். எ.கா. – அரசு, கயிறு, ஒன்பது, வரலாறு.

100. வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம்எனப்படும். எ.கா. – பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

101.மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். எ.கா. – பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

102.இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம்எனப்படும். எ.கா. – எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.

103.’வ்என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

104.”சு,டு,று” ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

105.வரகு+யாது – வரகியாது, முதல் சொல்லின் இறுதியில் உள்ள குஎன்னும் எழுத்து கிஎன்று ஒலிக்கிறது. அதுவும் முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கிறது.

106.தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம்’ எனப்படும். குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.

107. குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்.

108.குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். எ.கா. – கொக்கு + யாது = கொக்கியாது, தோப்பு + யாது = தோப்பியாது.

109.’மியாஎன்பது ஓர் அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது). இதில் மியில் (மி = ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும். எ.கா. – கேள் + மியா = கேண்மியா, செல் + மியா = சென்மியா

110.குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

111.பிரித்து எழுதுக: குற்றியலுகரம் – குறுமை+இயல்+உகரம்

கலைச்சொல் அறிக:

112.மொழியியல் – மொழியியல்

113.ஒலியியல் – ஒலியியல்

114.பத்திரிகை – இதழியல்

115.பொம்மலாட்டம் – பொம்மலாட்டம்

116.எழுத்துக்கலை – எழுத்திலக்கணம்

117.உரையாடல் – உரையாடல்

118.திணை இரண்டு வகைப்படும். அவை 1. உயர்திணை 2. அஃறிணை.

119.ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர்.

120.பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களை அஃறிணை என்பர்.

 

இயல் 2

காடு

1. சுரதாவின் இயற்பெயர் – இராசகோபாலன்.

2. பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுரதா தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்.

3. உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.

4. சுரதாவின் படைப்புகள் – அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம்

5. சுரதாவின் காடுஎன்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் – இயற்கை எழில்.

6. ‘காடுஎன்னும் பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.

7. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

8. ‘பச்சை மயில்நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும்’, – என்னும் பாடல் வரிகளைப் பாடியவர் – சுரதா.

 

பொருள் தருக:

9. அதிமதுரம் – மிகுந்த சுவை

10. நச்சரவம் விடமுள்ள பாம்பு

11. ஈன்று – தந்து

12. கொம்பு – கிளை

13. ‘காடெல்லாம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + எல்லாம்

14. ‘கிழங்கு + எடுக்கும்என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – கிழங்கெடுக்கும்

15. காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருப்பதற்கு கவிஞர் சுரதா உவமையாக ஒப்பிடுவது கார்த்திகை விளக்குகள்.

16. காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் – கா, கால், கான், கானகம், கணையம், அடவி, அரில், அறல், அரண், ஆரணி, அழுவம், இயவு, இரும்பு, பதுக்கை, பழவம், புறவு, பொற்றை, பொழில், பொச்சை, பொதி, தில்லம், மிளை. , முளி, முதை, முளரி, வல்லை, விடர், வியல், வனம், சுரம்.

17. ‘நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி:‘, என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் பாரதியார்.

18. வாழை, கன்றை ஈன்றது.

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

19. ‘கொல்லிப்பாவைஎன்னும் சிற்றிதழை நடத்தியவர் – ராஜமார்த்தாண்டன்.

20. ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.

21. நாவற்பழத்திற்கு உவமையாக ராஜமார்த்தாண்டன் கூறுவது – கோலிக்குண்டு.

 

பொருள் தருக:

22. பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு

23. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

24. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெயர் + அறியா

25. ‘மனமில்லைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மனம் + இல்லை

26. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – நேற்றிரவு

27. ‘குழந்தை வரைந்தது

பறவைகளை மட்டுமே

வானம்

தானாக உருவானது‘, – என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் – கலாப்ரியா

28. ‘கொப்புகள் விலக்கி

கொத்துக் கொத்தாய் கருவேலங்காய்

பறித்துப் போடும் மெய்ப்பனை

ஒருநாளும்

சிராய்ப்பதில்லை

கருவமுட்கள்‘, – என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் – கலாப்ரியா

 

விலங்குகள் உலகம்

29. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி

30. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய புலிகள் காப்பகம் – முண்டந்துறை புலிகள் காப்பகம்.

31. முண்டந்துறை காப்பகத்தின் பரப்பளவு – 895 ச.கி.மீ.

32. உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.

33. ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை.

34. ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.

35. யானைக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.

36. ஒரு நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், தழைகளை உணவாக உட்கொள்ள வேண்டும், மேலும் அதற்கு அறுபத்தைந்து லிட்டர் தண்ணீர் தேவை.

37. யானைக்குக் கண்பார்வை குறைவு, மேலும் கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.

38. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் – மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)

39. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் (B.Sc. Forestry), முதுநிலை வனவியல் (M.Sc. Forestry) ஆகிய படிப்புகள் உள்ளன.

40. கரடி ஓர் அனைத்துண்ணி. அது பழங்கள், தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும்.

41. கரடிக்கு கறையான் மிகவும் பிடித்த உணவு.

42. நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்.

43. புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும்.

44. புலியின் கர்ப்பக் காலம் – 90 நாட்கள்

45. இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும்.

46. புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.

47. புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்று கூறுவோம்.

48. உலகில் ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன.

49. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தில்மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

50. இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.

51. இந்தியாவில் காணப்படும் மான் வகைகள் – சருகுமான், மிளாமான், வெளிமான்

52. ‘காட்டாறுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காட்டு +ஆறு

53. ‘அனைத்துண்ணிஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – அனைத்து + உண்ணி

54. ‘நேரம் + ஆகிஎன்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – நேரமாகி

55. ‘வேட்டை + ஆடியஎன்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – வேட்டையாடிய

 

இந்திய வனமகன்

56. மணல் தீவில் வளரும் ஒரே மரவகை – மூங்கில்

57. அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கியவர்.

58. ‘இந்தியாவின் வனமகன்என அழைக்கப்படுவர் – ஜாதவ் பயேங்

59. பிரம்மபுத்திரா ஆற்றில் 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஏராளமான பாம்புகள், மரங்கள் இல்லாத தீவில் கரை ஒதுங்கி அவற்றுள் சில பாம்புகள் இறந்து கிடந்தன.

60. அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் – மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டுமெனில் மண்ணின் தன்மையை மாற்ற வேண்டும். அதற்கு மண்புழுக்கள் மட்டுமன்றிச் சிவப்புக் கட்டெறும்புகளும் உதவும்என்று கூறினார்.

61. யானைகள் தங்கியிருக்கும் காடுதான் வளமான காடு.

62. 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு இந்திய வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.

63. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.

64. கௌகாத்தி பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர்பட்டம் வழங்கியுள்ளது.

65. ஜிட்டுகலிட்டா என்னும் வனவிலங்கு ஆர்வலர் ஜாதவ் பயங் காட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்றார்.

66. ஜாதவ் பயேங் அவர்களின் காடு பற்றிய செய்தி வெளிவந்த இதழ் – டைம்ஸ் ஆப் இந்தியா

 

நால்வகைக் குறுக்கங்கள்

67. ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர்.

68. சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.

69. , கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

70. வையம், சமையல், பறவை என சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

71. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும். எ. கா. – வையம்

72. ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும். எ. கா. – சமையல், பறவை

73. ஔவையார், வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஔகாரம் ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

74.காரக்குறுக்கத்தின் மாத்திரை அளவு – ஒன்றரை மாத்திரை

75. ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.

76. வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

77. மகரக்குறுக்கத்தின் மாத்திரை அளவு – கால் மாத்திரை

78. ‘ம்என்னும் எழுத்தின் மாத்திரை அளவு – அரை மாத்திரை

79. மகரக்குறுக்கத்தின் எ. கா. – போலும் – பொன்ம், மருளும் – மருண்ம்.

80. ‘எனும் ஆய்த எழுத்தின் மாத்திரை அளவு – அரை மாத்திரை

81. ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது – ஆய்தக்குறுக்கம்

82. தனிக்குறிலை அடுத்து வரும் ‘ல’கர, ‘ள’கர எழுத்துக்கள் வருமொழியிலுள்ள ‘த’கரத்தோடு சேரும்போது ஆய்தமாகத் திரியும்.

83. ஆய்தக் குறுக்கத்தின் எ. கா. – முள் + தீது – முஃடீது, கல் + தீது – கஃறீது.

84. பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியனவாகும்.

85. உயர்திணையில், ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால். எ.கா. – மாணவன், செல்வன்.

86. உயர்திணையில், ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால். எ.கா. – ஆதினி, மாணவி.

87. உயர்திணையில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். எ.கா. – மாணவர்கள், மக்கள்.

88. அஃறிணையில், ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால். எ.கா. – கல், பசு.

89. அஃறிணையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால். எ.கா. – மண் புழுக்கள், பசுக்கள்.

 

தமிழாக்கம் தருக:

90. வனப் பாதுகாவலர் – வனப் பாதுகாவலர்

91, உவமை – உவமை

92. வனவியல் – வனவியல்

93. Bio diversity – பல்லுயிர் மண்டலம்

94. இயற்கை வளம் – இயற்கை வளம்

 

திருக்குறள்

95. திருக்குறளில் உள்ள மூன்று பிரிவுகள் – அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்

102.’திருஎன்னும் அடைமொழியில் வருகின்ற தமிழின் முதல் நூல் – திருக்குறள்

103.அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 38

104.பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் – 70

105.இன்பத்துப் பாலில் உள்ள அதிகாரங்கள் – 25

106.திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள்- 133, மொத்த குறட்பாக்கள்- 1330

107.திருக்குறளுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்கள் – முப்பால், தெய்வநூல், பொய்யா மொழி, உத்திர வேதம், உலகப் பொதுமறை

108.திருவள்ளுவருக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்கள் – முதற்பாவலர், பொய்யில் புலவர், தெய்வப்புலவர், செந்தாப்போதார்

109.”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளைப் போற்றியவர் – ஔவையார்

 

110. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொல்.

வாய்மை எனப்படுவது – மற்றவர்களுக்கு தீங்கு தராத சொற்களைப் பேசுதல் ஆகும்.

111.அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும்.

112.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேட்கும் நினைக்கப் படும்.

பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.

113.உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.

114.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.

பொருள் வரும் வழிகளை அறிதலும், அவ்வழிகளில் பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைப் பாதுகாத்தலும், காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும் சிறந்த அரசின் செயல்களாகும்.

சேர்த்து எழுதுக:

115.தீது+உண்டோ – தீதுண்டோ

116.தன்+நெஞ்சு – தன்னெஞ்சு

பிரித்து எழுதுக:

117.யாதெனின் – யாது+எனின்

118.பொருட்செல்வம் – பொருள் + செல்வம்

119.காந்தியடிகள் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பின்பு தாமும் பொய் பேசாமையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்.

பிழையை திருத்தி எழுதுக:

120.”மேகங்கள் சூழ்ந்து கொண்டது” – மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

126.”கோவலன் சிலம்பு விற்கப் போனாள்” – கோவலன் சிலம்பு விற்கப் போனான்.

127.சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் ராஜமார்த்தாண்டன் நூலாக்கியுள்ளார்.

 

இயல் 3

 

புலி தங்கிய குகை

பொருள் கூறுக:

1. சிற்றில் – சிறு வீடு

2. யாண்டு- எங்கே

3.கல் அளை – கற்குகை

4. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

5. காவற்பெண்டு சங்க காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.

6. சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் – காவற்பெண்டு

7. காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

8. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

9.பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாகப் புறநானூறு விளங்குகிறது.

10. “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்” என்ற பாடல் வரியைப் பாடியவர் – காவற்பெண்டு

11. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – யாண்டு + உளனோ?

12. ‘கல் + அளைஎன்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – கல்லளை

பொருள் கூறுக:

13. சூரன் – வீரன்

14. பொக்கிஷம் – செல்வம்

15. சாஸ்தி – மிகுதி

16. விஸ்தாரம் – பெரும்பரப்பு

17. வாரணம் – யானை

18. பரி – குதிரை

19. சிங்காரம் – அழகு

20. கமுகு பாக்கு

21. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலை தொகுத்தவர் – நா. வானமாமலை

22. ஊர்வலத்தின் முன்னால் அசைந்து வருவது – வாரணம் (யானை)

23. பாஞ்சாலங்குறிச்சியில் நாயை விரட்டுவது – முயல்

24. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது – மாடி வீடு

பிரித்து எழுதுக:

25.பூட்டுங்கதவுகள் – பூட்டும்+கதவுகள்

26. தோரணமேடை – தோரணம்+மேடை

27. சேர்த்து எழுதுக: வாசல்+அலங்காரம் – வாசலலங்காரம்

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்

28. தேசியம் காத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் – சும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்

29. தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் – பசும்பொன் முத்துராமலிங்கர்

30. ‘வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கர்.

31. பசும்பொன் முத்துராமலிங்கர் சுத்தத் தியாகிஎன்று யாரால் பாராட்டப்பட்டார்? தந்தை பெரியார்

32. முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு – 30 அக்டோபர் 1908

33. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் – இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்

34. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் – உக்கிர பாண்டியத் தேவர், இந்திராணி அம்மையார்

35. இவர் இளமையிலேயே அன்னையை இழந்ததால் இசுலாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.

36. முத்துராமலிங்கத் தேவர் தொடக்கக் கல்வியை எங்கு கற்றார்? கமுதி

37. முத்துராமலிங்கத்தேவர் உயர்நிலைக் கல்வி கற்ற இடம் – மதுரை பசுமலைப் பள்ளி, இராமநாதபுரத்திலும்

38. முத்துராமலிங்கத் தேவர் உயர்நிலைக் கல்வி கற்றபோது எந்த ஊரில் பிலேக் நோய் பரவியது? – இராமநாதபுரம்

39. முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.

40. சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் ஆற்றல் உடையவராக முத்துராமலிங்கத்தேவர் விளங்கினார்.

41. வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர்.

42. தென்நாட்டில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் முத்துராமலிங்கத்தேவர்.

43. ‘தேசியம் காத்த செம்மல்என்று முத்துராமலிங்கத்தேவரை அழைத்தவர் – திரு. வி. கலியாணசுந்தரனார்.

44. ‘வங்கச்சிங்கம்என்று போற்றப்பட்டவர் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

45. முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

46. முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட கி.பி.(பொ.ஆ.) 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ஆறாம் நாள் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.

47. யாருடைய முயற்சியால் இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்கள் இணைந்தனர்? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

48. ‘நேதாஜிஎன்னும் பெயரில் வார இதழ் நடத்தியவர் – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

49. முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் மூன்று மணிநேரம் உரையாற்றினார்.

50. ‘இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை, முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்’ என்று காமராசர் யாரைக் குறிப்பிடுகிறார்? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

51. பேசத் தொடங்கியது சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று அறிஞர் அண்ணா முத்துராமலிங்கத்தேவரை புகழ்ந்துரைத்துள்ளார்.

52. “முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது, உதடுகளிலிருந்து அல்ல, உள்ளத்தால் எதிலும் உண்மையெனப் பட்டதை மறைக்காமல் பேசுவது அவர் வழக்கம்” என்று கூறியவர் – இராஜாஜி

53. வட இந்திய இதழ்கள் முத்துராமலிங்கத் தேவரின் பேச்சு யார் பேசியது போல் இருந்ததாகப் பாராட்டினர்? விட்டல் பாய், வல்லபாய் பட்டேல்

54. முத்துராமலிங்கத்தேவர் 1937 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

55. இலண்டனில் பாரிஸ்டருக்குப் படித்துவந்த தோழர் கே. டி. கே. தங்கமணி, ‘இந்தியத் தேர்தலில் இராமநாதபுரம் மன்னரை எதிர்த்துப் போட்டியிட்ட தேவர் அவர்களின் வெற்றியையும் பொப்பிலி அரசரை எதிர்த்துப் போட்டியிட்ட வி. வி. கிரி அவர்களின் வெற்றியையுமே இந்திய மாணவர்கள் எதிர்பார்த்திருந்தோம்எனக் குறிப்பிட்டிருந்தார்.

56. 1946 இல் முத்துராமலிங்கத்தேவர் போட்டியின்றி வெற்றிபெற்றார்.

57. 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலும் முத்துராமலிங்கத்தேவர் வெற்றி பெற்றார்.

58. 1962 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக, பரப்புரை செய்ய இயலாதபோதிலும் தேர்தலில் முத்துராமலிங்கத்தேவர் வெற்றி பெற்றார்.

59. ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது குற்றப்பரம்பரைச் சட்டம் ஆகும்.

60. பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதுவது – குற்றப்பரம்பரைச் சட்டம்.

61. முத்துராமலிங்கத்தேவர். 1934 ஆம் ஆண்டு மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.

62. முத்துராமலிங்கத்தேவர் தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.

63. ஆலய நுழைவுப் போராட்டம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் – 8 ஜூலை 1939 மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார்.

64. தேவர் திருச்சுழியில் இருந்து அர்ச்சகர்கள் இருவரை அழைத்து வந்து ஆலய நுழைவுப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்தார்.

65. விவசாயிகள் துயர்துடைக்க ஜமீன் விவசாயிகள் சங்கம்என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் – பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.

66. தேவர் சொந்தமாக 31 சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டுக் கொடுத்தார்.

67. விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்க பாரத மாதா கூட்டுறவு பண்டச் சாலையை ஏற்படுத்தியவர் – பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

68. 1938இல் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவர் – முத்துராமலிங்கத்தேவர்

69. மதுரை நூற்பு ஆலை தொழிலாளர்களின் உரிமைக்காக முத்துராமலிங்கத் தேவர் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராடினார்.

70. உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப் பெரிய அளவிலான மாநாடு ஒன்றை தேவர் நடத்தினார்.

71. பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று தேவர் போராடினார்.

72. தேவர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மத்திய பிரதேசத்தின் தாமோ என்னும் நகரில் உள்ள இராணுவச்சிறையில் அடைக்கப்பட்டுப் போர் முடிந்தபிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.

73. தேவர் 1936, 1955 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை பர்மா சென்றிருந்தார்.

74. முத்துராமலிங்கத் தேவர் மறைந்த நாள் – கி.பி. (பொ.ஆ.) 1963 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முப்பதாம் நாள்

75. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075.

76. சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாள்கள் 4000. தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்தவர் முத்துராமலிங்கத்தேவர் ஆவார்.

77. முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள் – தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரவசன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமய மேதை.

78. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் முதல் நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா நடைபெறுகிறது.

79. இந்திய அரசால் முத்துராமலிங்கத்தேவருக்கு 1995 இல் தபால் தலை வெளியிடப்பட்டது.

கப்பலோட்டிய தமிழர்

80. கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்பட்டவர் – வ. உ. சிதம்பரனார்.

81. “வசையொழிய வாழ்வரே வாழ்வார்” என்றவர் – வள்ளுவர்

82. மதுரை மாநகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்துப் புலவர் பாடும் புகழ் உடையவராய் விளங்கிய பாண்டித்துரையார் சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் ஐயனார்.

83. சுதேசக் கப்பல் கம்பெனியின் செயலாளர் – வ. உ. சிதம்பரனார்

84. சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார் மராட்டிய வீரர் பாலகங்காதர திலகர். 85. ‘வந்தே மாதரம் என்போம், எங்கள்

மாநிலத்தாயை வணங்கும் என்போம்‘, என்று பாடியவர் – பாரதியார்.

86. ‘சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்‘, என்று கூறியவர் – பின்ஹே

87. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி – பின்ஹே

88. வ. உ. சி சிறையில் அடைக்கப்பட்ட இடம் – கோவை, கண்ணனூர்

89. கைவருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தவர் – வ. உ. சி

90. “தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன்” என்றவர் – வ. உ. சிதம்பரனார்

91. ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தார்.

92. உயர்ந்த நூல்களில் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு மெய்யறிவு, மெய்யறம் என்ற சிறு நூல்களை இயற்றியவர் – வ. உ. சி.

93. ‘பாயக் காண்பது சுதந்திரவெல்லம்பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்என்று பாடியவர் – வ. உ. சிதம்பரனார்

94. “சொல்லின் செல்வர்” என அழைக்கப்படுபவர் – இரா.பி.சேது

95. செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் – இரா. பி. சேது.

96. இரா. பி. சேதுவின் தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.

97. ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இரா. பி. சேது எழுதியுள்ளார்.

 

வழக்கு

98. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை எனப்படும்.

99. இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்.

100.ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது வழக்கு இயல்பு ஆகும்.

101.இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். இலக்கணமுடையது, இலக்கணப்பொலி, மருஉ

102.இலக்கண நெறி மாறாமல் அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும். எ. கா. – நிலம், மரம், வான், எழுது.

103.இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்பொலி எனப்படும்.

104.இலக்கணப்பொலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும்.

105.இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர். எ. கா. – புறநகர், கால்வாய், தசை, கடைக்கண், வாயில், முன்றில், நுனிக்கிளை.

106.இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மருஉ எனப்படும்.

107.வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மருஉ ஆகும். எ. கா. – கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

108.ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும். 109.தகுதி வழக்கு மூன்று வகைப்படும். இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

110.பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும். எ.கா. – கால் கழுவி வந்தான், குழந்தை வெளியே போய்விட்டது. ஒன்றுக்குப் போய் வந்தேன்.

111.நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்

112.மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர். எ.கா. – ஓலை – திருமுகம், கறுப்பு ஆடு – வெள்ளாடு, விளக்கை அணை – விளக்கைக் குளிரவை, சுடுகாடு – நன்காடு, செத்தார் – துஞ்சினார் (இயற்கை எய்தினார்)

113.ஒரு குழுவினார் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும். எ.கா. – பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது), ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)

114.இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.

115.சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.

116.போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது. போலி மூன்று வகைப்படும். முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி.

117.சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும். எ. கா. – பசல் – பைசல், மஞ்சு- மைஞ்சு, மயல்- மையல்

118.சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும். எ. கா. – அமச்சு – அமைச்சு, இலஞ்சி – இலைஞ்சி, அரயர்- அரையர்

119.சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும். எ. கா. – அகம்- அகன், நிலம்- நிலன், முகம் – முகன், பந்தல்- பந்தர், சாம்பல்- சாம்பர்

120.அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக நகரம் கடைப்போலியாக வரும். லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்.

121.ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்பொலி எனப்படும். எ. கா. – ஐந்து- அஞ்சு

122.ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும். அவை 1. எழுவாய் 2. பயனிலை 3. செயப்படுபொருள்.

123.ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய். எ.கா. – நீலன் பாடத்தைப் படித்தேன், பாரி யார்?, புலி ஒரு விலங்கு.

124.ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.

எ.கா. – கரிகாலன் கல்லணையைக் கட்டினான், கரிகாலன் யார்?, கரிகாலன் ஒரு மன்னன்.

125.யாரை, எதை, எதை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள். எ.கா. – நான் கவிதையைப் படித்தேன், என் புத்தகத்தை எடுத்தது யார்?, நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.

 

மொழிபெயர்க்க:

126.பாலாட் – கதைப்பாடல்

127.தைரியம் – துணிவு

128.சொல் – பேச்சாற்றல்

129.தியாகம் – தியாகம்

130.ஒற்றுமை – ஒற்றுமை 131.சமத்துவம் – சமத்துவம்

 

பொதுமை வேட்டல்

1. “பண்ணினை இயற்கை வைத்த

பண்பனே போற்றி போற்றி” என்ற பாடலை இயற்றியவர் – திரு.வி.க

2. ‘வண்மைஎன்பதன் பொருள் – கொடைத்தன்மை

3. ‘திரு.வி. கஎன்பது – திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரம்

4. திரு.வி.க பிறந்த ஊர் – துள்ளம் (தண்டலம்)- காஞ்சிபுரம் (மாவட்டம்)

5. துள்ளம் தற்போது எவ்வாறு உள்ளது? தண்டலம்

6. தண்டலம் போரூருக்கு எத்திசையில் அமைந்துள்ளது? மேற்கு

7. மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் – திரு.வி. க

8. ‘தமிழ்த்தென்றல்என அழைக்கப்படுபவர் – திரு.வி. க.

9. எந்தப் பள்ளியில் திரு.வி.க தமிழாசிரியராகப் பணியாற்றினார்? வெஸ்லி பள்ளி (இராயப்பேட்டை)

10. திரு.வி.க ஆசிரியராக பணியாற்றிய இதழ் – நவசக்தி

11. திரு.வி.க நூல்களில் சில – மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு, பொதுமை வேட்டல்

12. பொதுமை வேட்டலில் உள்ள முதல் தலைப்பு – தெய்வநிச்சயம்

13. பொதுமை வேட்டலில் உள்ள இறுதித் தலைப்பு – போற்றி

14. பொதுமை வேட்டலில் உள்ள மொத்த தலைப்புகள் – 44

15. பொது வேட்டலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை – 430 திருக்குறள்

16. பொருள் தருக: புரை – குற்றம்

17. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் – திருவள்ளுவர்

18. திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள் – நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, சென்னாப்போதார், பெருநாவலர்

19. திருவள்ளுவரின் காலம் – கி. மு. 31

20. திருக்குறள் எந்த வெண்பாக்களால் ஆனது? குறள்

21. திருக்குறளில் திருஎன்பது – அடைமொழி

22. திருக்குறள் எத்தனை பிரிவுகளை உடையது? 3

23. திருக்குறள் எத்தனை அதிகாரங்களை உடையது? 133

24. திருக்குறளின் எண்ணிக்கை – 1330

25. திருக்குறள் எந்த நூல்களுள் ஒன்று? பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

26. ‘உலகப்பொதுமறைஎன அழைக்கப்படுவது – திருக்குறள்

27. தமிழிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது – திருக்குறள்

28. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? 107

29. உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் திருக்குறள் உலகப்பொதுமறை என அறியப்படுகிறது. தமிழ்மொழி

31. உலகில் – 6000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

32. “எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ்மொழி ஒன்றே” என்றவர் – வள்ளலார் 33. திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய செம்மொழிகள் எனப்படும்.

34. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழி என பட்டியலிட்டவர் – ச. அகத்தியலிங்கம்.

35. இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் – கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்

36. பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றான திருக்குறளுக்கு இணையான வேறு நூல் உலகில் இல்லை.

37. “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்றவர் – டாக்டர் கிரௌல்

38. குமரிக்கண்டத்தில் தான் தமிழ் தோன்றியதென கூறும் நூல் – தண்டியலங்காரம்

39. “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி” என்னும் வரி இடம் பெற்ற நூல் – தண்டியலங்காரம்

40. “ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்” என்னும் வரி இடம்பெற்ற நூல் – தண்டியலங்காரம்

41. ‘தன்னே ரிலாத தமிழ்எனக் கூறும் நூல் – தண்டியலங்காரம்

42. தமிழ்மொழி மெல்லோசையைப் பெற்றுள்ளது.

43. அம்மை, அப்பன் ஆகிய சொற்கள் எங்கு வழங்கப்படுகிறது? நாஞ்சில் நாடு

44. “தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்” எனக் கூறியவர் – கால்டுவெல்

45. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” எனக் கூறும் நூல் – தொல்காப்பியம்

46. தமிழில் இடுகுறிப் பெயர்கள் மிகவும் குறைவு.

47. தமிழில் இருவகை எண்கள் மட்டுமே உள்ளன.

48. வட மொழியில் ஒருமை, இருமை, பன்மை, என மூன்று வகை எண் உள்ளன.

49. தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால் வேறுபாடு உண்டு; பொருள்களுக்கு இல்லை.

50. புலவர்கள் செய்யுளுக்கு சிறப்பு சேர்க்க உவமை, உருவகம் முதலிய அணிகளைப் பயன்படுத்தினர். 51. உலகின் மிகப் பழமையான நிலப்பகுதி – குமரிக்கண்டம்

ஊரும்பேரும்

52. குறிஞ்சி நில ஊர்கள். எ. கா – ஆனைமலை, சிறுமலை, நாகமலை, வள்ளிமலை

53. ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி – மலை

54. மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று

55. குன்றிலும் உயரத்தில் குறைந்தது – கரடு மற்றும் பாறை

56. குன்றூர் அடுத்துள்ள ஊர்கள் – குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி, குட்டப்பாறை, பூம்பாறை

57. மலையைக் குறிக்கும் வட சொல் – கிரி

58. மலையையொட்டி எழுந்த ஊர்கள் – நீலகிரி, கிருஷ்ணகிரி, சிவகிரி

59. அத்திமரங்கள் சூழ்ந்த ஊர் – ஆர்க்காடு (அத்தி – ஆர்)

60. ஆலமரங்கள் நிறைந்த ஊர் – ஆலங்காடு

61. ஆடு, மாடுகள் அடைக்கப்படுமிடம் – பட்டி

62. கடம்ப மரம் சூழ்ந்த ஊர்கள் – கடம்பூர், கடம்பத்தூர்

63. தென்னை சூழ்ந்த பகுதி – தெங்கூர்

64. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் – பட்டினம்

65. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான சிற்றூர்கள் – பாக்கம்

66. தமிழகத்தில் பரதவர் வாழ்ந்த ஊர்கள் – கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை

67. இக்காலத்தில் மீனவர்கள் வாழும் பகுதிகளின் பெயர்கள் குப்பம் என்னும் பெயரைச் சேர்த்து பல்கி வருகின்றன. 68. தம் ஊருக்கு கிழக்கே எழுந்த ஊர்ப்பகுதிகள் – கீழூர்

69. தம் ஊருக்கு மேற்கே எழுந்த ஊர்ப்பகுதிகள் – மேலூர்

70. தம் ஊருக்கு தெற்கில் எழுந்த ஊர்ப்பகுதிகள் – தென்பழஞ்சி

71. தம் ஊருக்கு வடக்கில் எழுந்த ஊர்ப்பகுதிகள் – வடபழஞ்சி

72. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையமாக பிரித்தனர்? 72

 

சார்பெழுத்துக்களின் வகைகள்

73. உயிரெழுத்தும் (12), மெய்யெழுத்தும் (18) தனித்து இயங்கி முதன்மை பெற்று விளங்குவதை – முதலெழுத்து என்கிறோம்.

74. முதலெழுத்தைச் சார்ந்து வரும் எழுத்துகள் – சார்பெழுத்துக்கள்

75. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 10

76. முதலெழுத்துக்களின் எண்ணிக்கை – 30

77. “சாதிகள் இல்லையடி பாப்பா” எனப் பாடியவர் – பாரதியார்

78. , , என்பன – சுட்டெழுத்துக்கள்

79. தற்போது வழக்கில் இல்லாத சுட்டெழுத்து –

80. புலித்தேவன் தன்னுடைய 12 வயதில் மற்போர், சிலம்பம், வாள்வீச்சு போன்றவற்றைக் கற்றுக்கொண்டார்.

81. தமிழகத்தின் சிறப்பு மரம் – பனை மரம்

82. கால்டுவெல் பிறந்த ஆண்டு – 1815

83. கால்டுவெல் பிறந்த நாடு – அயர்லாந்து

84. கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம் – இடையன்குடி (நெல்லை)

85. கால்டுவெல் மறைந்த இடம் – கொடைக்கானல் (1891)

86. திராவிட மொழிகளின் தாய் தமிழ்என உலகுக்குப் பறைசாற்றியவர் – கால்டுவெல்

87. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற நூலின் ஆசிரியர் – கால்டுவெல்

88. ‘ஆற்றூர்பேச்சு வழக்கில் – ஆத்தூர் என மருவியுள்ளது

 

 

 

இயல் 2

 

1. “நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே” என்னும் பாடல் வரிகளை இயற்றியவர்- மோசிகீரனார் (புறநானூறு)

2. ‘தானைஎன்பதன் பொருள் படை

3. மோசிகீரன் என்பதில் மோசிஎன்பது – ஊர்

4. மோசிகீரன் என்பதில் கீரன்என்பது – குடிப்பெயர்

5. அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையால் கவரி வீசப்பெற்றவர் – மோசிகீரனார்.

6. மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம் பெற்ற நூல்கள் – அகநானூறு, குறுந்தொகை, நற்றினை, புறநானூறு

7. அரசனைக் குறிக்கும் வேறு பெயர்கள் – கோ, மன்னன், வேந்தன்

 

முதுமொழிக்காஞ்சி

8. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் – மதுரைக் கூடலூர் கிழார்

9. ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்எனும் வரி இடம்பெற்ற நூல் – முதுமொழிக்காஞ்சி.

10. மதுரைக் கூடலூர் கிழார் பிறந்த ஊர் – கூடலூர்

11. முதுமொழிக்காஞ்சி என்பது – காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று

12. உலகியல் உண்மைகளை தெளிவாக எடுத்து இயம்பும் நூல் – முதுமொழிக்காஞ்சி

13. அறவுரைக் கோவை என அழைக்கப்படும் நூல் – முதுமொழிக்காஞ்சி

14. முதுமொழிக்காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10

15. முதுமொழிக்காஞ்சியில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை – 100

 

மீனாட்சிசுந்தரனார்

16. “யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்” என்று எழுந்தவர்- உ. வே. சா

17. ‘தமிழ்த்தாத்தாஎன்று அழைக்கப்பட்டவர் – உ. வே. சா

18. உ. வே. சாவின் ஆசிரியர் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

19. மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஆண்டு – 6 ஏப்ரல் 1815

20. மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஊர் – எண்ணெய்க்கிராமம் (திருச்சி)

21. மீனாட்சிசுந்தரனாரின் பெற்றோர் – சிதம்பரம் மற்றும் அன்னத்தாச்சியார்

22. மீனாட்சிசுந்தரனார் யாரிடம் தமிழ் கற்றார்? தந்தை

23. யாருக்கு கற்க வேண்டும்என்ற வேட்கை தனியாததாக இருந்தது? மீனாட்சிசுந்தரனார்

24. குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோரின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரனார்

25. உ. வே. சாவுக்கு ஆசிரியராக இருக்கும் போது மீனாட்சி சுந்தரனார் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இறந்தார்.

26. மீனாட்சிசுந்தரனாரால் 80க்கு மேற்பட்ட நூல்கள் இயற்றப்பட்டன.

27. தலபுராணம் பாடுவதில் வல்லவர் – மீனாட்சிசுந்தரனார்

28. இறுதி வரை நிறைகுடமாகவே வாழ்ந்தவர் – மீனாட்சிசுந்தரனார்

29. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்றவர் – மீனாட்சிசுந்தரனார்

30. “நாளை எந்தாய் மொழி சாகுமானால் இன்றே

நான் இறந்துவிடுவேன்” என்றவர் – ருஷ்யக்கவிஞன் ரசூல் கம்சதேவ்

31. ‘சொல்லத் துடிக்குது மனசுநூலின் ஆசிரியர் – வீ. கே.டி. பாலன்

32. “அறம் பெருகும் தமிழ்படித்தால், அகத்தில் ஒளிபெருகும்” என்றவர் – பெருஞ்சித்திரனார்.

 

கோவூர்கிழார்

33. உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டவர் – நலங்கிள்ளி

34. கோவூர்கிழார் பிறந்த மரபு – வேளாளர்

35. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகிய நூல்களில் இடம்பெற்ற கோவூர்கிழாரின் பாடல்களின் எண்ணிக்கை – 18

36. போரைத் தவிர்த்த புலவர் யார்? கோவூர் கிழார்

37. சோழருக்குரிய பூ – அத்திப்பூ

38. சேரருக்குரிய பூ – பனம்பூ

39. பாண்டியருக்குரிய பூ – வேப்பம்பூ

40. மலையமான் பிள்ளைகளைக் காத்தவர் – கோவூர்கிழார்

41. இளந்தத்தனாரைச் சிறை மீட்ட செம்மல் – கோவூர்கிழார்

42. யாரைப் பற்றி பாடி இளந்தத்தனார் பரிசு பெற்றார்? நலங்கிள்ளி

43. இளந்தத்தனாரை சிறை பிடித்தவர் – நெடுங்கிள்ளி

 

உயிர்மெய், ஆய்தம்

44. உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை – 216

45. முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, ஆய்தம், அஃகேனம் என அழைக்கப்படுவது – ஆயுத எழுத்து

46. காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள நகரம் – திருச்சி

47. யார் காலத்து சிற்பங்கள் மலைக்கோட்டையில் காணப்படுகின்றன? – பல்லவர் காலத்து சிற்பங்கள்

48. கோழிமாநகரம் என அழைக்கப்பட்டது — உறையூர்

49. பண்டைத்தமிழரின் நீர் மேலாண்மைக்கு சிகரம் – கல்லணை

50. தாயுமானவருக்கு ஞானநெறி காட்டியவர் – மௌனகுரு

51. தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் – வ. வே. சுப்பிரமணியம்

52. “ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே” என்பது – புறநானூறு

53. “களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்பது – புறநானூறு.

 

இயல்  3

ஈரட்டுற மொழிதல் (தனிப்பாடல்)

1. “ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் –இரட்டுறமொழிதல் (தனிப்பாடல்)

2. “ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும்” என்றப் பாடல் வரிகள் இயற்றியவர் – காளமேகப் புலவர்.

3. ‘துன்னலர்என்பதன் பொருள் – பகைவர் மற்றும் அழகிய மலர்

4. காளமேகப் புலவர் பிறந்த இடம் – நந்திக்கிராமம் (கும்பகோணம்) மற்றும் எண்ணாயிரம் (விழுப்புரம்) எனவும் கூறுவர்.

5.காளமேகப் புலவரின் இயற்பெயர் – வரதன்

6. காளமேகப் புலவர் எந்தக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார்? திருவரங்கம்

7. காளமேகப் புலவர் எந்தச் சமயத்திலிருந்து எந்தச் சமயத்திற்கு மாறினார்? வைணவத்திலிருந்து சைவ சமயத்திற்கு

8. இருபொருள் நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் – காளமேகப் புலவர்

9. “கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)” என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் – ஔவையார்

10. “எறும்புந்தன் கையால்எண் சாண்” என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் – ஔவையார்

11. தனிப்பாடல் திரட்டு யாரால் தொகுக்கப்பட்டது? சந்திரசேகர கவிராசப் பண்டிதர்

12. ‘தனிப்பாடல் திரட்டுயாருடைய வேண்டுகோளுக்கிணங்க தொகுக்கப்பட்டது? பொன்னுசாமி (இராமநாதபுர மன்னர்)

13. இடைச்சொல் தனியாக வந்தால் பொருள் தராது; பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொற்களைச் சார்ந்தே வரும்.

14. ‘மாநகர்’ என்பதில் ‘மா’ என்பது – உரிச்சொல்

15. இலக்கண வகைச் சொற்கள் – நான்கு வகைப்படும்

16. உரிச்சொல்லை மிகுதியாக பயன்படுத்துவது – செய்யுள்

17. கிழவிக்கு மருதுபாண்டி அளித்த ஊர் – பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button