#1. பொருத்துக. (A) அதோ அந்தப் பறவை போல - 1) எஸ்.ராமகிருஷ்ணன் (B) உலகின் மிகச்சிறிய தவளை - 2) வ.உ.சிதம்பரனார் (C) திருக்குறள் தெளிவுரை - 3) கி.ராஜநாராயணன் (D) சிறுவர் நாடோடிக் கதைகள் - 4) ச.முகமது அலி
#2. ‘உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை’. - என்னும் கூற்றை கூறியவர் யார்?
#3. உருவகத்தைப் பற்றி ‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்' - என எழுதியவர் யார்?
#4. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்த இரு தமிழ் நூல்களின் பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர் ?
#5. "ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது, புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" - எனும் கூற்று இடம் பெற்றுள்ள நூல் எது ?
#6. சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய ’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது _________
#7. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.
#8. இலக்கணக்குறிப்பு தருக. ‘கழல்’
#9. பத்துப்பாட்டு நூல்களுள் 583 பாடல் அடிகளைக் கொண்ட நூல் எது?
#10. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல" - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
#26. சந்தக்கவிமணி என சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
#27. முல்லைப்பாட்டு எவ்வகைப் பாவால் பாடப்பட்டது?
#28. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது ?
#29. “ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி” - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
#30. பின்வருவனவற்றுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றாத நூல் எது ?
#31. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் யார்?
#32. ‘தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குகிறது’ என்று கூறியவர் யார்?
#33. பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க. I. ஔகாரக்குறுக்கம் சொல்லுக்கு முதலில் வரும் போது ஒரு மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும் II. ஔகாரக்குறுக்கம் சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வராது
#34. “வளி மிகின் வலி இல்லை”- எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
#35. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்று கூறியவர் யார்?
#36. “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு”- இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
#37. ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’- எனப் பாராட்டப் பெற்றவர் யார் ?
#38. ‘காலின் ஏழடிப் பின் சென்று’ - இவ்வடி இடம்பெற்ற நூல் எது?
#39. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' - என்று கூறியவர் யார் ?
#40. பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க. I. ‘சொல்’ ஐந்து திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும். II. ‘சொல்’ உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.
#41. “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும்” என்று கூறியவர் யார்?
#42. ‘ஞானபோதினி’ என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
#43. ப.சிங்காரம் வேலைக்காக இந்தோனேசியா சென்று, மீண்டும் இந்தியா வந்து எந்த நாளிதழில் பணியாற்றினார்?
#44. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
#45. கணிமேதாவியார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் ?
#46. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. சிலப்பதிகாரம், முத்தமிழ்க் காப்பியம் என்றும் குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது.
#47. கீழ்க்கண்டவற்றில் செய்யுளிசை அளபெடைக்கான எடுத்துக்காட்டு எது?
#48. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” - எனும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
#49. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது எது?
#50. பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க. I. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. II. வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
#51. பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க ? I. ‘கஜா’ புயலின் பெயர் தாய்லாந்து தந்தது. II. ‘பெய்ட்டி’ புயல் பெயர் இலங்கை தந்தது.
#52. “குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்” - எனும் பாடல் வரியில் ‘பொம்மல்’ என்பதன் பொருள் யாது ?
#55. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார் ?
#56. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” - என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
#57. சொற்பொருள் தருக. ‘விரை’
#58. இலக்கணக்குறிப்பு தருக. ‘தமிழ்த்தொண்டு’
#59. “உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டிற்குரிய அம்முதல் மொழியும் தமிழே” என்றவர் யார்?
#60. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்' - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
#61. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டு முதல் தொடங்கியது?
#62. தொழிற்பெயர் எந்த இடத்திற்கே உரியது?
#63. சொற்பொருள் தருக: ‘கோடு’
#64. முல்லை நிலத்திற்குரிய பூ வகைகளில் பொருத்தமற்றது எது?
#65. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
#66. ‘விருந்தே புதுமை’ - என்று கூறியவர் யார் ?
#67. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்னும் செய்தி இடம்பெறும் நூல் எது ?
#68. “புதிய ஆத்திசூடி” என்னும் நூலினை இயற்றியவர் யார் ?
#69. “வீணையிலிருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்” - என்று காற்றைப் பற்றி பாடியவர் யார்?
#70. “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” - என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
#71. சங்க இலக்கியங்களில் மொத்த அடிகளின் எண்ணிக்கை யாது?
#72. ‘செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம்’ என்று கூறியவர் யார்?
#73. நெற்பயிரில் ஒன்றான சம்பாவில் மட்டும் எத்தனை வகைகள் உள்ளன?
#74. “குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்” - எனும் கூற்று யாருடையது ?
#75. “ திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வட புறமும் தென் புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்” - எனும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
#76. “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!” - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
#77. திருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்தி எந்த இயலில் ஓர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்?
#78. தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?
#79. இலக்கணக்குறிப்பு தருக. ‘உறுதுயர்’
#80. ஊதைக்காற்று எத்திசையில் இருந்து வீசும் ?
#81. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, எத்தனை ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து விடும் ?
#82. கோபல்லபுரத்து மக்கள் என்னும் புதினம் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது?
#83. “சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்” - என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
#84. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?
#85. ஆளுமையை அடையாளம் காண்க. I. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் மற்றும் தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர். II. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்.
#86. இலக்கணக்குறிப்பு தருக. ‘கைதொழுது’
#87. முதன் முதலாகத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?
#88. “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்” – எனும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
#89. உலக வானிலை அமைப்பின் புயல்களுக்கான சிறப்பு வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் எது?
#90. பொருத்துக. (A) தாள் - 1) கீரையின் அடி (B) தண்டு -2) கேழ்வரகு அடி (C) கோல் - 3) குத்துச்செடி அடி (D) தூறு -4) மிளகாய்ச்செடி அடி
#91. ‘உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்’ என்று கூறியவர் யார்?
#92. 'முறுக்கு மீசை வந்தார்' இத்தொடரில் அமைந்துள்ள தொகை யாது ?
#93. 'வெற்றி வேற்கை’ என்றழைக்கப்படும் நூல் எது?
#94. “தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள" - என்று கூறியவர் யார்?
#95. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
#96. ‘வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு நுணங்கிநூல் நோக்கி நுழையா இணங்கிய’ - என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
#97. ‘மடமொழி’ என அழைப்படுபவர் யார்?
#98. சரியான இணையைத் தேர்வு செய்க. I. புகார்க்காண்டம் - பத்துக் காதைகள் II. மதுரைக்காண்டம் - ஏழு காதைகள் III. வஞ்சிக்காண்டம் - பதின்மூன்று காதைகள்
#99. இலக்கணக்குறிப்பு தருக. ‘ஒழுக்கம்’
#100. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்” - எனும் பாடல் வரியில் ‘துய்ப்பது’ என்பதன் பொருள் யாது?