6th Tamil இயல் 1 வினா விடைகள்
ஆறாம் வகுப்பு – இயல் 1
Answer Key Below
1. தமிழுக்கு அமுதென்றுபேர்! – அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! – என்ற பாடலின் ஆசிரியர் யார்?
2. தமிழுக்கு அமுதென்றுபேர்! என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
3. பாரதிதாசன் இயற்பெயர் என்ன?
4. பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள் என்ன?
5. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு போன்ற கருத்துக்களை தம் கவிதைகளில் வலியுறுத்தியவர் யார்?
6. பாவேந்தர் என்றும் புரட்சிக்கவி என்றும் சிறப்பிக்கப்படுபவர் யார்?
7. பாரதிதாசன் பிறந்த ஆண்டு?
8. பாரதிதாசன் நடத்திய இதழ் என்ன?
9. தமிழே உயிரே வணக்கம் , தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் – என்ற பாடலின் ஆசிரியர் யார்?
10. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளம் கோதையரே கும்மி கொட்டுங்கடி – என்ற பாடலின் ஆசிரியர் யார்?
11. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி – என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?
12. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளன?
13. பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன?
14. கொய்யாக்கனி, கனிச்சாறு, நூறாசிரியம், பாவியக்கொத்து, போன்ற நூல்களை எழுதியவர் யார்?
15. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் யாவை?
16. வான்தோன்றி வளிதோன்றி நெருப்புத்தோன்றி – என்ற பாடலின் ஆசிரியர் யார்?
17. உலகில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன?
18. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் – என்று பாடியவர் யார்?
19. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! – என்று கூறியவர் யார்?
20. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழையான நூல் எது?
21. “தமிழ்” என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் எது?
22. “தமிழ்நாடு“ என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் எது?
23. ” தமிழன்” என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் எது?
24. சிந்திக்கவும், சிந்தித்ததை வெளிப்படுத்தவும் நமக்கு உதவுவது எது?
25. சீர்மை என்பதன் பொருள் என்ன?
26. முத்தமிழ் என்பது என்ன?
27. நம் எண்ணத்தை வெளிப்படுத்துவது எது?
28. நம் உள்ளத்தை மகிழ்விப்பது எது?
29. நம் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது எது?
30. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்?
31. நீண்ட நீண்ட காலம் – நீ, நீடு வாழ வேண்டும் என்று பாடியவர் யார்?
32. 5 என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?
33. 9 என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?
34. 2 என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?
35. வேளாண்மை என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
36. பாம்பு, முதலை, மீன், செய் முதலிய சொற்கள் இடம்பெற்ற நூல் எது?
37. உலகம் என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
38. கோடை என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
39. வெள்ளம் என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
40. உழவர் என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
41. முடி என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
42. பார் என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
43. மருந்து என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
44. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர் யார்?
45. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பதை விளக்கிய நூல் எது?
46. கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும், இதனை கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி என்று குறிப்பிட்டுள்ள நூல் எது?
47. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற கருத்தை ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி என்ற வரிகள் மூலம் கூறியவர் யார்?
48. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி நெடு வெள்ளூசி நெடு வசி பரந்தவடு என்ற வரிகள் மூலம் கூறப்படும் நூல் எது?
49. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் என்ற வரிகள் மூலம் கூறப்படும் நூல் எது?
50. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்று கூறிய அறிவியல் அறிஞர் யார்?
51. கலிலியோ நிறுவிய கருத்தை திருவள்ளுவமாலை என்னும் நூலில் தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் என்ற வரிகள் மூலம் குறிப்பிட்டவர் யார்?
52. இலக்கணம் எத்தனை வகைப்படும்?
53. உயிருக்கு முதன்மையானது எது?
54. இயல்பாக காற்று வெளிப்படும் போது தோன்றும் எழுத்துக்கள் எவை?
55. குறில் எழுத்துக்கள் எத்தனை?
56. நெடில் எழுத்துக்கள் எத்தனை?
57. உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
58. மாத்திரை என்பது எதனைக் குறிக்கிறது?
59. உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
60. கபிலர் என்னும் சொல்லின் மாத்திரை அளவு?
61. மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
62. மெய் என்பதன் பொருள் என்ன?
63. பூவின் நிலைகள் மொத்தம் எத்தனை?
64. அகத்தி, பசலை, முருங்கை ஆகியவற்றின் இலைப் பெயர் என்ன?
65. கரும்பு, நாணல் ஆகியவற்றின் இலைப் பெயர் என்ன?
66. சப்பாத்திக் கள்ளி, தாழை ஆகியவற்றின் இலைப் பெயர் என்ன?
67. நெல், வரகு ஆகியவற்றின் இலைப் பெயர் என்ன?
68. கமுகு (பாக்கு) என்பதன் இலைப் பெயர் என்ன?
69. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் என்ன?
70. ஊழி என்பதன் பொருள் என்ன?
71. ஆழிப்பெருக்கு என்பதன் பொருள் என்ன?
72. நிருமித்த என்பதன் பொருள் என்ன?
73. அன்பு என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
74. அரசு என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
75. பூவின் மூன்றாம் நிலை என்ன?
விடைகள்:
1. பாரதிதாசன்
2. பாரதிதாசன் கவிதைகள்
3. கனக சுப்புரத்தினம்
4. அமுது, நிலவு, மணம்
5. பாரதிதாசன்
6. பாரதிதாசன்
7. 1891 ஏப்ரல் 29
8. குயில்
9. காசி ஆனந்தன்
10. பெருஞ்சித்திரனார்
11. கனிச்சாறு
12. 8 தொகுதி
13. துரை மாணிக்கம்
14. பெருஞ்சித்திரனார்
15. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்
16. வாணிதாசன்
17. 6000
18. பாரதியார்
19. பாரதியார்
20. தொல்காப்பியம்
21. தொல்காப்பியம்
22. சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம்
23. அப்பர் தேவாரம்
24. மொழி
25. ஒழுங்கு முறை
26. இயல், இசை, நாடகம்
27. இயல் தமிழ்
28. இசைத்தமிழ்
29. நாடகத்தமிழ்
30. எண்கள் அடிப்படையில்
31. அறிவுமதி
32. ரு
33. கூ
34. உ
35. கலித்தொகை, திருக்குறள்
36. குறுந்தொகை
37. தொல்காப்பியம், கிளவியாக்கம், திருமுருகாற்றுப்படை
38. அகநானூறு
39. பதிற்றுப்பத்து
40. நற்றிணை
41. தொல்காப்பியம், வினையியல்
42. பெரும்பாலும் உப்பை
43. அகநானூறு, திருக்குறள்
44. தொல்காப்பியர்
45. தொல்காப்பியம்
46. கார்நாற்பது
47. ஔவையார்
48. பதிற்றுப்பத்து
49. நற்றிணை
50. கலிலியோ
51. கபிலர்
52. 5 வகைப்படும்
53. காற்று
54. உயிர் எழுத்துக்கள்
55. குறில் – 5
56. நெடில் – 7
57. 12
58. காலஅளவு
59. 216
60. 3½ மாத்திரை
61. 18
62. உடம்பு
63. 7 நிலைகள்
64. கீரை
65. தோகை
66. மடல்
67. தாள்
68. கூந்தல்
69. பழமை
70. நீண்டதொரு காலப்பகுதி
71. கடல்கோள்
72. உருவாக்கிய
73. தொல்காப்பியம், களவியல், திருக்குறள்
74. திருக்குறள்
75. முகை